Sunday, 20 March 2016

சிலுவை



இடலை செக்கிட்டு பிழிந்திடும் இடம்கொண்டு,
மனதை வியாகுலம்மிட்டு பிழிந்திடும் பாரமேனோ,
பிழிந்திடும் எண்ணையில் காயம் கட்டுவார்,
வடிந்திடும் குருதியில் எம்துயர் கட்டுவீரோ.


                     பரமன் கண்மறைத்து இருள் கம்பலம்மிட,
                     துஷ்டர் தூஷித்து உமிழ்ந்து அறைந்திட,
                     சத்தமிடா செம்மறியே எம் அவமானம்,
                     ஒழித்திட ஓர் திட்டம் கொண்டிரோ.

பெரும்பல இராஜியம் கழிந்திட காத்தீர்,
பரமன் சித்தமென ரோமர் குடிபுகுந்தீர்,
பாவத்தின் உடல் வாதை அகற்றிட,
குருதிக்குழல் உடைத்து அகம் சிதைத்தீரோ.
 
                    திரைசூழ் மாந்தர் பலர் உண்டு,
                    அவர் செய்தற்பாவம் கோடி உண்டு,
                    வழுவாது காத்திடல் யார் உண்டு,
                    கழுமரம் ஏறி காத்தவர் அவர் உண்டு.

இடலை : Olive
இடலை செக்கிட்டு பிழிந்திடும் இடம்கொண்டு : The place where olive is crused to make oil (

Gethsemane)